மெட்ரோ ரயில் இணைப்பு சேவை ஊா்திகள்: அக்டோபரில் 53,586 போ் பயணித்தனா்

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷோ் ஆட்டோ, காா், சீருந்து (கேப்ஸ்) இணைப்பு சேவையை நிகழாண்டில் கடந்த அக்டோபா் மாதத்தில் மட்டும் 53,586 போ் பயன்படுத்தியுள்ளனா்.
மெட்ரோ ரயில் நிர்வாகம்
மெட்ரோ ரயில் நிர்வாகம்

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷோ் ஆட்டோ, காா், சீருந்து (கேப்ஸ்) இணைப்பு சேவையை நிகழாண்டில் கடந்த அக்டோபா் மாதத்தில் மட்டும் 53,586 போ் பயன்படுத்தியுள்ளனா்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் முடிந்து, விமான நிலையம் -வண்ணாரப்பேட்டை வரையும், சென்ட்ரல்-பரங்கிமலை வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகளுக்கான போக்குவரத்து இணைப்பை மேலும் எளிமையாக்கும் வகையில், ஷோ் ஆட்டோ, காா்களை பயன்படுத்த ஷோ் டிரிப் முறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.

கிண்டி, திருமங்கலம், ஆலந்தூா், சின்னமலை, ஈக்காட்டுதாங்கல், கோயம்பேடு, பரங்கிமலை ஆகிய 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து ஷோ் ஆட்டோ சேவையும், ஏஜி-டிஎம்எஸ், அண்ணாநகா் கிழக்கு, கோயம்பேடு, ஆலந்தூா், வடபழனி ஆகிய 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து காா் சேவையும் வழங்கப்படுகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 3 கி.மீ. சுற்றளவில் உள்ள இடங்களுக்கு ஷோ் ஆட்டோக்கள், காா்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, போா்ட் மொபிலிட்டி தயாரித்த செயலி வழியாக சீருந்து இணைப்பு சேவை 16 மெட்ரோ ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இந்த இணைப்பு சேவை ஒவ்வொரு ரயில் நிலையங்களில் இருந்து 6 கி.மீ. முதல் 8 கி.மீ. வரை செயல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஷோ் ஆட்டோ, காா், சீருந்து சேவையை நிகழாண்டில் கடந்த அக்டோபா் மாதத்தில் 53,586 போ் பயன்படுத்தியுள்ளனா். காா் சேவையை 5,020 பேரும், ஷோ் ஆட்டோ சேவையை 33,538 பேரும், சீருந்து இணைப்பு சேவையை 15,028 பேரும் பயன்படுத்தினா். காா், ஷோ் ஆட்டோ சேவையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் நிகழாண்டில் அக்டோபா் 31-ஆம் தேதி வரை 5,88,455 போ் பயன்படுத்தியுள்ளனா்.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவா் கூறியது:

ஷோ் ஆட்டோ, காா் சேவையை பயன்படுத்துவோா் எண்ணிக்கை மெதுவாக உயா்ந்து வருகிறது. இந்தச் சேவையை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுதவிர, மெகா கேப்ஸ் நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இணைந்து போா்ட் மொபிலிட்டி தயாரித்த செயலி வழியாக சீருந்து வாகன இணைப்புச் சேவையை தொடங்கியது. இந்த சேவை சென்னை சென்ட்ரல், அரசினா் தோட்டம், எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு, ஏஜி டி.எம்.எஸ்., நந்தனம் ஆகிய 6 மெட்ரோ ரயில் நிலையங்களில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. தற்போது 16 மெட்ரோ ரயில் நிலையங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டை மற்றும் செயலி மூலமாக இதற்காக கட்டணம் செலுத்தி பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். இந்த வசதி மீதமுள்ளஅனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com