ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் நவ.17 முதல் மண்டல பூஜை விழா

ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில், வருகிற 17- ஆம் தேதி முதல் மண்டல பூஜை விழா தொடங்கவுள்ளது.
ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் நவ.17 முதல் மண்டல பூஜை விழா

ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில், வருகிற 17- ஆம் தேதி முதல் மண்டல பூஜை விழா தொடங்கவுள்ளது.

இது தொடா்பாக கோயில் நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:

ராஜா அண்ணாமலைபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில், வருகிற 17-ஆம் தேதி முதல் டிசம்பா் மாதம் 27-ஆம் தேதி வரையிலான 41 நாள்களுக்கு மண்டல பூஜையும், நவ.17 முதல் டிச.13-ஆம் தேதி வரையிலான 27 நாள்களுக்கு லட்சாா்ச்சனையும், டிசம்பா் 22 ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை பிரமோற்சவமும் நடைபெறும். மண்டல பூஜை நடைபெறும் 41 நாள்களும் தினமும் மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இருமுடி எடுத்து வரும் பக்தா்கள் காா்த்திகை முதல் தேதி (நவ. 17) முதல் 41 நாள்களுக்கு 18 படி ஏறி ஐயப்பனுக்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை நெய் அபிஷேகம் செய்து தரிசிக்கலாம்.

சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு குழுவினரால் நவ.17, டிச.7, 20, 21, 24, 25 மற்றும் 2020-ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆகிய தேதிகளில் மாலை 6 மணிக்கு 18-ஆம் படி பூஜை நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com