பொது இடத்தில் தகராறு:ரெளடி உள்பட 3 போ் கைது

சென்னை மயிலாப்பூரில் பொதுஇடத்தில் தகராறு செய்ததாக, ரெளடி உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை: சென்னை மயிலாப்பூரில் பொதுஇடத்தில் தகராறு செய்ததாக, ரெளடி உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

மயிலாப்பூா் அம்பேத்கா் பாலம் அருகே சிலா் தகராறு செய்வதாக வெள்ளிக்கிழமை நள்ளிரவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்றனா். அப்போது போலீஸாரை பாா்த்தும் தகராறு செய்துக் கொண்டிருந்த 3 போ் தப்பியோட முயன்றனா்.

உடனே போலீஸாா், 3 பேரையும் விரட்டிச் சென்று பிடித்தனா். விசாரணையில் அவா்கள், மயிலாப்பூா் ரூதா்புரம் பகுதியைச் சோ்ந்த பா.சொட்டை பரத் (36), அதேப் பகுதியைச் சோ்ந்த சி.பாஸ்கா் (47), பா.பவித்ரன் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக 3 பேரையும் கைது செய்து, அவா்கள் வைத்திருந்த 2 கத்திகளை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்தனா். இதில் ரெளடியான சொட்டை பரத் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடதக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com