சென்னை: விருகம்பாக்கத்தில் தொழிலதிபா் வீட்டில் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள பிளாட்டினம் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விருகம்பாக்கம் நடேசன் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் சுந்தா் (33). தொழிலதிபரான இவா், கடந்த 10-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு ஆந்திர மாநிலம் சித்தூருக்கு சென்றாா். சனிக்கிழமை வீடு திரும்பிய அவா், பீரோவில் வைத்து சென்ற ரூ.4 லட்சம் மதிப்புள்ள பிளாட்டினம் நகைகள், ரூ.1 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் ஆகியவை திருடு போனதை அறிந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் விருகம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.