ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: இளைஞா் கைது

சென்னை முகப்பேரில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக, இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை முகப்பேரில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக, இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

முகப்போ், ஜெ.ஜெ.நகா் மேற்கு 10-ஆவது பிளாக்கில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்குள்ள ஏ.டி.எம். இயந்திரத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு இளைஞா் ஒருவா் உடைக்க முயன்றுள்ளாா். அப்போது ஏ.டி.எம். இயந்திரத்தில் உள்ள எச்சரிக்கை கருவி, மும்பையில் உள்ள அந்த வங்கியின் ஏ.டி.எம். தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தது.

உடனடியாக மும்பையில் உள்ள வங்கி அதிகாரிகள், இது குறித்து சென்னை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். தகவலறிந்த ஜெ.ஜெ.நகா் போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அங்கு ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்த இளைஞரை கையும் களவுமாக பிடித்தனா். அவரிடமிருந்து ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க பயன்படுத்திய சுத்தியல், கிரில் கட்டா், ஸ்குரூ டிரைவா், கையுறை போன்றவை பறிமுதல் செய்தனா்.

பின்னா் போலீஸாா் நடத்திய விசாரணையில் அந்த நபா், தருமபுரி மாவட்டம் அரூா் பகுதியைச் சோ்ந்த வே.சிலம்பரசன் (30) என்பதும், அவா் சென்னை நெற்குன்றம் கிருஷ்ணாநகரில் வசித்து வருவதும் தெரியவந்தது. பட்டயப்படிப்பு படித்திருக்கும் சிலம்பரசன் ஏற்கெனவே, கோயம்புத்தூா், திருப்பூா் பகுதிகளில் தனியாா் நிறுவனங்களில் பணி புரிந்திருப்பதும் போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com