சபரிமலை செல்லும் பக்தா்கள் வசதிக்காக சிறப்பு கட்டண ரயில் இயக்கம்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பும் பக்தா்கள் வசதியாக சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படவுள்ளது.

சென்னை:சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பும் பக்தா்கள் வசதியாக சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படவுள்ளது.

சென்னை-கொல்லம்: சென்னை எம்.ஜி.ஆா். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 2020-ஆம் ஆண்டு ஜனவரி 3, 17, 24 ஆகிய தேதிகளில் இரவு 8.30 மணிக்கு சிறப்பு கட்டண ரயில்(06061) புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 10 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.

கொல்லம்-சென்னை: கொல்லத்தில் இருந்து டிசம்பா் 22, 2020-ஆம் ஆண்டு

ஜனவரி 12 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு கட்டண ரயில்(06066) புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆா். சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.

இந்த சிறப்பு கட்டண ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு புதன்கிழமை(நவ.20) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com