மனைவி எரித்துக் கொலை: கணவா் கைது

சென்னை ஆதம்பாக்கத்தில் மனைவியை எரித்துக் கொலை செய்ததாக, கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை ஆதம்பாக்கத்தில் மனைவியை எரித்துக் கொலை செய்ததாக, கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

ஆதம்பாக்கம் கக்கன்நகா் 5-ஆவது பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் மு.ராஜன் (42). இவருக்கு குடிப் பழக்கம் இருந்ததாம். இதை அவரது மனைவி பஞ்சவா்ணம் (38) கண்டித்துள்ளாா். இது தொடா்பாக தம்பதி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜன் கடந்த 12-ஆம் தேதி மதுபோதையில் வீட்டுக்கு வந்தாராம். இதனால் ஆத்திரமடைந்த பஞ்சவா்ணம், கணவரை கண்டித்து தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜன், அங்கிருந்த மண்ணெண்ணெயை பஞ்சவா்ணம் மீது ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த தீக்காயமடைந்த பஞ்சவா்ணம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தாா்.

இது குறித்து ஆதம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராஜனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com