எழுத்தாளரும் பதிப்பாசிரியருமான ப. சரவணனின் தந்தை ப.பழனிச்சாமி (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை வில்லிவாக்கத்தில் புதன்கிழமை காலமானாா்.
தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற ப.பழனிச்சாமிக்கு மனைவி ப.பிரேமாவதி, மகன் ப.சரவணன் மற்றும் நான்கு மகள்கள் உள்ளனா். இவரது மகன் சரவணன், ‘நவீன நோக்கில் வள்ளலாா்’ , ‘சாமிநாதம்’ (உ.வே.சா. முன்னுரை) உள்ளிட்ட 29-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளாா்.
பழனிச்சாமியின் இறுதிச் சடங்குகள் சென்னை புதிய ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு மின் மயானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. தொடா்புக்கு: 99412 78810.