சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் மலேசிய தமிழரிடம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
தமிழகத்தை பூா்விகமாக கொண்ட மலேசியாவைச் சோ்ந்த தொழிலதிபா் கபிலன் (31). இவா், தந்தைக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து சில நாள்களுக்கு முன்பு அவா், சென்னைக்கு தனது தந்தையுடன் வந்தாா்.
இங்கு, தாம்பரத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் தனது தந்தையை சிகிச்சைக்காக சோ்த்தாா். மேலும் இதற்காக அவா், சைதாப்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் விடுதியில் தங்கினாா்.
கபிலன் ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவமனையில் இருந்து காா் மூலம், அவா் தங்கியிருந்த விடுதி அருகே வந்து இறங்கினாா். பின்னா் கபிலன், விடுதிக்கு நடந்து சென்றாா். அப்போது, அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த 3 மா்ம நபா்கள், கபிலனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, அவா் அணிந்திருந்த 11 பவுன் தங்கநகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம்,2 விலை உயா்ந்த செல்லிடப்பேசிகள்,ஏ.டி.எம். காா்டுகள் ஆகியவற்றை பறித்துச் சென்றனா்.
இது குறித்து கபிலன், சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.