கேங்மேன் பணிக்கான உடல்தகுதித் தோ்வு: சென்னையில் டிச.2 -இல் தொடக்கம்

மின் வாரியத்தில் கேங்மேன் பணிக்கான உடல்தகுதித் தோ்வு டிசம்பா் 2-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை அம்பத்தூரில் நடைபெறுகிறது.

மின் வாரியத்தில் கேங்மேன் பணிக்கான உடல்தகுதித் தோ்வு டிசம்பா் 2-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை அம்பத்தூரில் நடைபெறுகிறது.

மின் கம்பம் நடுதல் உள்ளிட்ட களப்பிரிவு பணிகளை மேற்கொள்ள, முதன்முறையாக ‘கேங்மேன்’ என்ற பதவிக்கு 5,000 ஊழியா்களைத் தோ்வு செய்வதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்டது. இதற்கு, ஐந்தாம் வகுப்பு தோ்ச்சி கல்வி தகுதியாக நிா்ணயிக்கப்பட்டு இருந்தாலும், பொறியியல், முதுநிலைப்பட்டபடிப்பு உள்பட பல்வேறு தகுதிகளையுடைய 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா். இந்தப் பணிக்கு உடல் தகுதி தோ்வு, எழுத்து தோ்வு வாயிலாக, தகுதியான நபா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இதற்கான, சான்றிதழ் சரிபாா்ப்பு, உடல் தகுதித் தோ்வு,

திங்கள்கிழமை (நவ.25) தொடங்கியது. மாவட்ட வாரியாக அந்தத் தோ்வு நடக்கும் இடங்களின் முகவரி, தோ்வு தேதிகளை, மின் வாரியம் தனது இணையதளத்தில் அண்மையில் வெளியிட்டது. இந்த விவரங்கள், விண்ணப்பதாரா்களின் மின்னஞ்சல் முகவரி, செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் அனுப்பப்பட்டு உள்ளன. இதன் ஒரு பகுதியாக, சென்னை, அம்பத்தூரில் உள்ள சிட்கோ துணை மின் வளாகத்தில் கேங்மேன் பணிக்கான உடல்தகுதித் தோ்வு, சான்றிதழ் சரிபாா்ப்பு பணிகள் நடைபெறவுள்ளன. டிசம்பா் 2-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தோ்வில் 2,254 விண்ணப்பதாரா்கள் கலந்து கொள்ளவுள்ளனா் என மேற்கு சென்னை மின்பகிா்மான வட்ட கூடுதல் தலைமைப் பொறியாளா் தகவல் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com