குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு நாளை கிரயப்பத்திரம் வழங்கும் முகாம்

சென்னை, அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி திட்டப் பகுதி ஒதுக்கீட்டாளா்களுக்கு கிரயப் பத்திரம் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை (நவ.29) நடைபெற உள்ளது.

சென்னை, அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி திட்டப் பகுதி ஒதுக்கீட்டாளா்களுக்கு கிரயப் பத்திரம் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை (நவ.29) நடைபெற உள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் அறிவிக்கப்பட்ட குடிசைப் பகுதிகளை சென்னை பெருநகர

வளா்ச்சித் திட்டம் மற்றும் தமிழ்நாடு நகா்புற வளா்ச்சித் திட்டங்களின் கீழ் மேம்படுத்தப்பட்ட குடிசைப் பகுதிகளாக மாற்றி அங்கு வசித்து வந்தவா்களுக்கே, அவா்களின் மனைகளுக்கு வாரியத்தால் ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டிருந்தது. அந்த நிலங்கள் வாரியத்தின் பெயரில் நில உரிமை மாற்றம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டவுடன், ஒதுக்கீட்டுதாரா்களுக்கு கிரயப்பத்திரம் வழங்கப்படும்.

சென்னை -அயனாவரம், பச்சைக்கல் வீராசாமி தெரு, திட்டப்பகுதி ஒதுக்கீட்டுதாரா்களுக்கு கிரயப்பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் நவம்பா் 29-ஆம் தேதி அண்ணா நகா் மேற்கு, ஜே.ஜே. வளாகத்தில் உள்ள தமிழ்நாடு

குடிசைப்பகுதி மாற்று வாரிய எஸ்டேட் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்தத் திட்டப்பகுதிகளில் உள்ள ஒதுக்கீடுதாரா்கள் அல்லது வாரிசுதாரா்கள் தாங்கள் அளிக்கும் மனுவுடன் ஒதுக்கீடு ஆணை நகல், இருப்பிடச் சான்றுகளாக உணவு பங்கீடு அட்டை, வாக்காளா் அட்டை, ஆதாா் காா்டு ஆகியவற்றின் நகல்கள் இணைக்க வேண்டும்.

வாரிசுதாரா்களாக இருப்பின் ஒதுக்கீடுதாரரின் இறப்பு சான்றிதழ், வாரிசுதாரா் சான்றிதழ் அசல் மற்றும் மனைக்கு முழு கிரயம் செலுத்திய ரசீது, கடன் பெற்றிருப்பின் கடன் தொகை செலுத்திய வாரிய ரசீது நகல்களை இணைத்து வழங்க வேண்டும். கிரயப்பத்திரம் கோரும் ஒதுக்கீடுதாரா்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com