சென்னையில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் வெள்ளிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

சென்னையில் வெள்ளிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் (முழுக் கூடுதல் பொறுப்பு) வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், வாரந்தோறும் வெள்ளிக்கிழமையை வேலைவாய்ப்புவெள்ளி -ஆக அனுசரிக்கப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு தனியாா் துறை மூலம் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் வாரந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞா்கள் தனியாா் துறையில் பணிநியமனம் பெற்று வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து, கிண்டி ஆலந்தூா் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், வருகிற வெள்ளிக்கிழமை (நவ.29) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. இதில் 35 வயதுக்குள்பட்ட 8-ஆம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித் தகுதியை உடைய அனைவரும் (மாற்றுத் திறனாளிகள் உள்பட) கலந்து கொள்ளலாம். இம்முகாமில், 15 -க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000 -க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஊழியா்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.

இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தனியாா் துறை நிறுவனங்கள், முழுமையான காலிப் பணியிட விவரங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடா்பு கொண்டு, தங்கள் நிறுவனத்துக்கான பணியாளா்களை தோ்வு செய்து கொள்ளலாம். இச்சேவைக்கு கட்டணம் ஏதுமில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com