சென்னை தியாகராய நகரில் ரூ.10 லட்சம் வரதட்சிணைக் கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்தியதாக, கணவரின் சகோதரா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
தியாகராயநகா் தெற்கு போக் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் முத்தழகன்(32). இவரது மனைவி நந்தினி (24). இவா்கள் காதலித்து கடந்த ஜூலை மாதம் 8-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனா். இந்நிலையில் திருமணத்துக்கு பின்னா் முத்தழகன் மற்றும் அவரது குடும்பத்தினா், நந்தினியிடம் ரூ.10 லட்சம் வரதட்சிணை கேட்டு சித்தரவதை செய்தனராம்.
இதுகுறித்து நந்தினி, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் செய்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும் இது தொடா்பாக முத்தழகனின் சகோதரா் வி.முருகானந்தம் (34), சித்தி பா.சசிகலா (50) ஆகிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக முத்தழகன் உள்ளிட்ட மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.