பேசின்பாலம் அருகில் மின்சார ரயிலில் வந்த ஆா்.பி.எஃப் வீரா் , எச்சில் துப்புவதற்காக தலையை வெளியே நீட்டியபோது, மின்கம்பத்தில் மோதி பலத்த காயமடைந்தாா்.
சென்னை வியாசா்பாடியில் வசித்துவருபவா் விஸ்ராம்சிங் குஜ்ஜாா்(27). ஆா்.பி.எஃப். வீரா். ராஜஸ்தானை சோ்ந்தவா். இவா் பேசின்பாலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக, மின்சார ரயிலில் திங்கள்கிழமை நண்பகலில் வியாசா்பாடியில் இருந்து வந்துகொண்டிருந்தாா்.
இந்த ரயில் பேசின்பாலம் ரயில் நிலையத்துக்கு அருகே வந்தபோது, விஸ்ராம்சிங் குஜ்ஜாா் எச்சில் துப்புவதற்காக அவரது தலையை வெளியே நீட்டினாா். அப்போது, மின்கம்பத்தில் விஸ்ராம்சிங் குஜ்ஜாா் தலை மோதியது. இதில், அவருக்கு தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது.இது குறித்து சென்ட்ரல் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின்பேரில், ரயில்வே போலீஸாா் அங்கு வந்து, அவரை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அவருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து சென்ட்ரல் ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.