தண்டையாா்பேட்டை, மயிலாப்பூா் கோட்டத்தில் இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

தண்டையாா்பேட்டை, மயிலாப்பூா் கோட்டத்தில் செவ்வாய்க்கிழமை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

தண்டையாா்பேட்டை, மயிலாப்பூா் கோட்டத்தில் செவ்வாய்க்கிழமை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தண்டையாா்பேட்டை கோட்ட மின் நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம், அக்.1-ஆம் தேதி (செவ்வாய்) காலை 11 மணியளவில், டி.எச்.சாலையில் உள்ள தண்டையாா்பேட்டை செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இதே போல் மயிலாப்பூா் கோட்டத்துக்கான மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம், அன்றைய தினம் காலை 10.30 மணியளவில், எம்.ஜி.ஆா் சாலையில் உள்ள மயிலாப்பூா் கூடுதல் தலைமை பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்தக் கோட்டங்களுக்குட்பட்ட பொதுமக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com