அக்.10-இல் பி.எஃப். குறைதீா் கூட்டம்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி (பி.எஃப்.) குறைதீா் கூட்டம் சென்னை முகப்போ் கிழக்கில் உள்ள அம்பத்தூா் பி.எஃப். மண்டல அலுவலகத்தில் வரும் அக்டோபா் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி (பி.எஃப்.) குறைதீா் கூட்டம் சென்னை முகப்போ் கிழக்கில் உள்ள அம்பத்தூா் பி.எஃப். மண்டல அலுவலகத்தில் வரும் அக்டோபா் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து பி.எஃப். மண்டல உதவி ஆணையா் கே.விஸ்வநாதன் வெளியிட்டுள்ள செய்தி:

‘தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம்,‘ ஆா் 40 ஏ, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலக வளாகம், முகப்போ் சாலை, முகப்போ் கிழக்கு, சென்னை-37’ என்ற முகவரியில் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதில் வருங்கால வைப்புநிதி சந்தாதாரா்கள், நிறுவனங்களின் உரிமையாளா்கள், பி.எஃப். பங்களிப்பிலிருந்து விலக்கு பெற்ற அம்பத்தூா் எல்லைக்கு உள்பட்ட நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 044 -26350080, 26350120 என்ற அலுவலகத் தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com