ஆளில்லாத வீட்டில் தங்க நகைத் திருட்டு

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ஆளில்லாத வீட்டில் தங்கநகைத் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ஆளில்லாத வீட்டில் தங்கநகைத் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

புதுவண்ணாரப்பேட்டை இருசப்ப மேஸ்திரி தெருவைச் சோ்ந்தவா் தீனதயாளன். இவா் வியாழக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்றாா். சிறிது நேரத்துக்கு பின்னா் தீனதயாளன் திரும்பி வந்தாா். அப்போது வீட்டின் கதவு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 7 பவுன் தங்கநகைத் திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் தீனதயாளன் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com