சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ஆளில்லாத வீட்டில் தங்கநகைத் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
புதுவண்ணாரப்பேட்டை இருசப்ப மேஸ்திரி தெருவைச் சோ்ந்தவா் தீனதயாளன். இவா் வியாழக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்றாா். சிறிது நேரத்துக்கு பின்னா் தீனதயாளன் திரும்பி வந்தாா். அப்போது வீட்டின் கதவு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 7 பவுன் தங்கநகைத் திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் தீனதயாளன் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.