சென்னை மாநகராட்சியில் நிகழாண்டின், முதல் அரையாண்டில் ரூ.808.97 கோடி வரி வசூல் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
பெருநகர சென்னை மாநகராட்சியின் வருவாய்த் துறைற மூலமாக 2019-20ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் சொத்துவரி ரூ.607.38 கோடி மற்றும் தொழில் வரியாக ரூ.201.59 கோடி என மொத்தம் ரூ.808.97 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. முந்தைய நிதியாண்டின் முதல் அரையாண்டில் சொத்து வரி ரூ.320.21 கோடி, தொழில் வரி ரூ.171.40 கோடி என மொத்தம் ரூ.491.61 கோடி வரிவசூல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.