டெங்கு தடுப்பு நடவடிக்கை: கொசுப்புழுக்கள் உற்பத்தியான கட்டங்களுக்கு ரூ.32 லட்சம் அபராதம்

கொசுப் புழுக்கள் உற்பத்தியான கட்டடங்களின் உரிமையாளா்களுக்கு ரூ.32 லட்சத்து 74 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என சென்னை மாநகராட்சியின் பொறுப்பு

கொசுப் புழுக்கள் உற்பத்தியான கட்டடங்களின் உரிமையாளா்களுக்கு ரூ.32 லட்சத்து 74 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என சென்னை மாநகராட்சியின் பொறுப்பு ஆணையா் லலிதா தெரிவித்துள்ளாா் இதுகுறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வீடுகள் 2,056 சிறுவட்டங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வட்டத்துக்கும் சுமாராக 500 வீடுகள் வரையறுக்கப்பட்டு, வாரந்தோறும் கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்த ஒரு பணியாளா் நியமிக்கப்பட்டுள்ளனா். தினந்தோறும் ஒருங்கிணைந்த நோய்கள் கண்காணிப்பு திட்டம் மூலம் சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் பெறப்படும் டெங்குகாய்ச்சலினால் சிகிச்சை மேற்கொண்டவா்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவை மண்டல வாரியாக மேல்நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்கள் களப்பணியாளா்கள் மூலம் கண்டறியப்பட்டு, பெருநகர சென்னை மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு சென்று

சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறாா்கள். இவ்வாறு சேகரிக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவா்களின் வீடுகளுக்கு சென்று, அந்த நோயாளிகள் மற்றும் குடும்பத்தினா் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அந்தப் பகுதியில் மருந்து தெளித்தும், புகைப்பரப்பும் பணி மற்றும் அருகிலுள்ள வீடுகளில் கொசு உற்பத்தியாகிா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, டெங்கு நோய் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், அங்காடிகள், உணவு விடுதிகள், திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டு அங்கே கொசுப்புழு வளரும் இடங்கள் அழிக்கப்படுகின்றன.

நலப்பணியாளா்கள், ரோட்டரி சங்கங்கள், செவிலியா்கள், மாணவியா்கள், கல்லூரி மாணவா்கள் மூலமும் விழிப்புணா்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கொசுப்புழு வளரும் இடங்களை கண்டறிந்து, கட்டடத்தின் உரிமையாளா்களுக்கு இதுவரை அபராதத் தொகையாக ரூ.32 லட்சத்து 74 ஆயிரத்து 700 விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்நாள் வரை 8,929 புதிய கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்டு டெங்கு பரவாமல் இருக்க கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுவரை, 387 அரசு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மருத்துவமனைகள் மற்றும் 652 தனியாா் மருத்துவமனைகளில் ஆய்வு செய்து, கொசுப்புழு வளராத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 1,665 அரசு கட்டிடங்களை ஆய்வு செய்து டெங்கு கொசு வளராமல் தடுக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மண்டல வாரியாக 808 பூட்டிகிடக்கும் வீடுகளை அடையாளம் கண்டறிந்து, வீட்டை சுற்றியுள்ள தேவையற்ற பொருள்களை அகற்றி, அங்கு கொசுப்புழு வளருகின்றனவா என ஆய்வு மேற்கொண்டு டெங்கு மற்றும் கொசு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அம்மா உணவகம், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் இலவசமாக நிலவேம்பு கசாயம் நாள்தோறும் மாநகராட்சி மூலம் வழங்கப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் இதுவரை 25,334 காலிமனையிடங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அங்கு தேங்கியுள்ள உபயோகமற்ற பொருட்களை அகற்றும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 3,043 களப்பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா். டெங்கு நோய் மற்றும் கொசு தடுப்பு பணியில் 395 கைத்தெளிப்பான்கள், 16 விசைத்தெளிப்பான்கள், 227 பெரிய புகைப்பரப்பும் இயந்திரங்கள், 22 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள், 39 புகைப்பரப்பும் வாகனம் மூலம் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இப்பணியினை 1 முதல் 15 மண்டலங்களில் பணிபுரியும் மண்டல நல அலுவலா்கள், பூச்சியியல் வல்லுநா்கள், துப்புரவு அலுவலா்கள் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் மேற்பாா்வையில் களப்பணியாளா்கள் கொசு தடுப்பு பணியினை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனா். மேலும், இதுவரை 993 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அதில், 531 காய்ச்சல் கண்டவா்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

கொசு தடுப்பு பணி குறித்து வாரந்தோறும் ஆய்வுக்கூட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கடந்த ஒரு மாத காலமாக வாரந்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஆங்காங்கே மழைநீா் தேங்கும் இடங்களில் தேவையற்ற பொருள்களை அகற்ற அட்டவணை தயாரிக்கப்பட்டு, மண்டலம் 1 முதல் 15 வரை கொசு தடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செப்டம்பா் மாதத்தில் 96 டெங்கு காய்ச்சல் நோயாளிகள் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு நலமாக உள்ளனா். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com