தாம்பரம் கோட்டத்தில் வியாழக்கிழமை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தாம்பரம் கோட்டத்துக்கான மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம், வியாழக்கிழமை (அக். 10) காலை 10.30 மணி அளவில், மேற்கு தாம்பரம் முல்லை நகரில் உள்ள புதுதாங்கல் துணை மின்நிலைய வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் தாம்பரம் கோட்டத்துக்குட்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.