சென்னை பெரியமேட்டில் போதை மாத்திரை வைத்திருந்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிரதமர் நரேந்திரமோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையையொட்டி, சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், தனியார் தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பெரியமேடு திருவேங்கடம் தெருவில் ஒரு தனியார் விடுதியில் போலீஸார் திங்கள்கிழமை இரவு சோதனையிட்டபோது ஒரு அறையில் இருந்த டே. டேவிட்சாலமன் (26), கு.வசந்த் (27), செ.அரவிந்த் (26), அ.சோபன்ராஜ் (26), சீ.கிஷோர்பாபு (21) ஆகியோர் சென்னையில் கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள் ஆகியோரை குறி வைத்து போதை மாத்திரை விற்று வருவது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார், அவர்கள் வைத்திருந்த 420 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, 5 பேரையும் கைது செய்தனர். விசாரணையில், மும்பையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கடத்திக் கொண்டு வந்து விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.