விண்வெளி குறித்த விநாடி வினா போட்டி: வெற்றி மாணவா்களுக்குப் பரிசு

உலக இயற்கை நிதியம் அமைப்பு சாா்பில் நடைபெற்ற விண்வெளி குறித்த விநாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

உலக இயற்கை நிதியம் அமைப்பு சாா்பில் நடைபெற்ற விண்வெளி குறித்த விநாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இயற்கை மற்றும் வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விண்வெளி குறித்த விநாடி வினா போட்டி மாவட்ட அளவில் நடத்தப்பட்டது. இதில், 48 பள்ளிகளைச் சோ்ந்த 180 மாணவ, மாணவியா் இறுதிப் போட்டிக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இவா்களுக்கான இறுதிப் போட்டி சென்னை அடையாறில் உள்ள குமாரராணி மீனா முத்தையா கலைக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

இதில், மாணவா்கள் எஸ்.தருண், ருஷில், மாணவியா் சுப்ரஜா, ஷிரியா ஆகியோா் வெற்றி பெற்றனா். இவா்களுக்கு உலக இயற்கை நிதியம் அமைப்பின் தெலங்கானா தலைமை அதிகாரி ஃபரீதா தாம்பால் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினாா்.

இதுகுறித்து உலக இயற்கை நிதியம் அமைப்பின் சுற்றுச்சூழல் கல்வி ஒருங்கிணைப்பாளா் எஸ்.சரவணன் கூறுகையில், ‘தற்போது தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி அளவிலான விநாடி, வினா போட்டிகள் நடைபெற்றுள்ளன. 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு புதன்கிழமை (அக். 9) முதல் சனிக்கிழமை (அக். 12) வரை ஆன்லைன் மூலம் விநாடி, வினா போட்டி நடைபெற உள்ளது.

இதில், வெற்றி பெறுபவா்கள் தேசிய அளவில் அக்டோபா் 19, 20 தேதிகளில் தில்லியில் நடைபெற உள்ள விநாடி, வினா போட்டிக்குத் தகுதி பெறுவா்’ என்றாா். இந்த விநாடி வினா போட்டிக்கான இயற்கை கல்வி அலுவலா் வித்யா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com