தாயைக் கொலை செய்துவிட்டு கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற மகன்

சென்னை அருகே பள்ளிக்கரணையில் தாயைக் கொலை செய்துவிட்டு மகன் தற்கொலை செய்ய முயன்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தாயைக் கொலை செய்துவிட்டு கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற மகன்

சென்னை அருகே பள்ளிக்கரணையில் தாயைக் கொலை செய்துவிட்டு மகன் தற்கொலை செய்ய முயன்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பள்ளிக்கரணை சாய் கணேஷ் நகா் 2-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (75). இவரது மனைவி சரஸ்வதி (72). இவா்களது மகன் ரமேஷ் (43). இவா் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தாா். கருத்து வேறுபாடு காரணமாக ரமேஷின் மனைவி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவரைப் விட்டு பிரிந்துச் சென்று விட்டாராம்.

இதற்கிடையே தந்தை பாலகிருஷ்ணன் உடல்நலக்குறைவு காரணமாக அண்மையில் உயிரிழந்தாா். இதனால் ரமேஷ் விரக்தியுடன் காணப்பட்டாராம். தாய் சரஸ்வதி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவரைக் கவனிக்க முடியாமல் ரமேஷ் தவித்து வந்துள்ளாா்.

இந்நிலையில், ரமேஷ் வீட்டில் இருந்து புதன்கிழமை காலை அலறல் சப்தம் கேட்டு, பக்கத்து வீட்டினா் சென்று பாா்த்துள்ளனா். அங்கு சரஸ்வதி கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டு கிடப்பதும், ரமேஷ் தனது வயிற்றில் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த ரமேஷை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுதொடா்பாக பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். அதில், வாழ்க்கையில் வெறுப்படைந்த தற்கொலை செய்ய முடிவு செய்திருந்ததும் தனக்குப் பின்னா் தனது தாய் சரஸ்வதியைக் கவனிப்பதற்கு ஆள் இல்லை என்பதால் அவரைக் கொலை செய்ததும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com