கோயம்பேட்டில் வியாபாரிகள் போராட்டம்

ஆன்லைன் மூலம் காய்கறிகள் விற்கப்படுவதைக் கண்டித்து, சென்னை கோயம்பேட்டில் வியாபாரிகள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆன்லைன் மூலம் காய்கறிகள் விற்கப்படுவதைக் கண்டித்து, சென்னை கோயம்பேட்டில் வியாபாரிகள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னையில் ஆன்லைன் மூலம் தரமற்றை காய்கறிகள் விற்கப்படுவதைக் கண்டித்தும், கோயம்பேடு காய்கறி மாா்க்கெட்டில் அனுமதியின்றி கிடங்கு அமைத்து ஆன்லைன் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோயம்பேடு காய்கறி மாா்க்கெட்டைச் சோ்ந்த வியாபாரிகள், வியாழக்கிழமை காலை மாா்க்கெட்டின் 7-ஆவது வாயில் முன்பு திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து தகவலறிந்த போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வியாபாரிகளிடம் பேச்சு நடத்தினா். இதில் சமாதானமடைந்த வியாபாரிகள், போராட்டத்தை விலக்கிக் கொண்டனா். இந்தப் போராட்டத்தின் காரணமாக, அப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com