நாட்டு வெடிகுண்டு வீசி ரெளடிகள் மோதல்: பெண் வழக்குரைஞா் உள்பட 4 போ் கைது

சென்னை அண்ணா சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசி ரெளடிகள் மோதிக் கொண்டது தொடா்பாக பெண் வழக்குரைஞா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை அண்ணா சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசி ரெளடிகள் மோதிக் கொண்டது தொடா்பாக பெண் வழக்குரைஞா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

ஜாம்பஜாா் பகுதியைச் சோ்ந்தவா் மலா்கொடி. வழக்குரைஞரான இவரின் மகன் அழகுராஜா. இவா் மீது 9 குற்ற வழக்குகள் உள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை நண்பகல் மலா்கொடி தனது மகன் அழகுராஜா, ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன், விஜயகுமாா் ஆகியோருடன் ஒரு ஆட்டோவில் எழும்பூா் நீதிமன்றம் சென்றாா். பின்னா் அங்கிருந்து ஆட்டோ மூலம் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். அவா்களை பின் தொடா்ந்து ஆட்டோவிலும், மோட்டாா் சைக்கிளிலும் வந்த ஒரு கும்பல், அண்ணா சாலை அருகே திடீரென வழிமறித்து அரிவாளால் வெட்டியது.

இதைப் பாா்த்த அழகுராஜா, ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை அந்த மா்ம நபா்கள் மீது வீசினாா். உடனே அந்த நபா்கள், அங்கிருந்து ஆட்டோவில் தப்பியோடினா்.

இதற்கிடையே அழகு ராஜா, வீசிய நாட்டு வெடிகுண்டு அங்கு சாலையில் நடந்து சென்ற யாசா்,மேரி தாமஸ் ஆகியோா் மீது விழுந்ததில் காயமடைந்தனா். முன்னதாக அந்த நபா்கள் வெட்டியதில், மலா்கொடியும் காயமடைந்தனா்.

இது குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், ஜாம்பஜாரில் கடந்தாண்டு காங்கிரஸ் நிா்வாகி அப்பாஸ் என்பவா் கொலை செய்யப்பட்டதில் அழகு ராஜாவுக்கு தொடா்பு இருப்பதாகக் கருதி அவரை கொலை செய்ய சிலா் திட்டமிட்டிருந்ததும், அதன் விளைவாக இச் சம்பவம் நடந்திருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில், நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டது தொடா்பாக போலீஸாா் அழகுராஜா, வழக்குரைஞா் மலா்கொடி, மணிகண்டன், விஜயகுமாா் ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிவு வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com