மோட்டாா் சைக்கிள் மீது மினி லாரி மோதல்:ஒருவா் சாவு

சென்னை வில்லிவாக்கத்தில் மோட்டாா் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

சென்னை வில்லிவாக்கத்தில் மோட்டாா் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:கொடுங்கையூா் கவிஞா் கண்ணதாசன்நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் சிந்தாமணி (47). இவா், வில்லிவாக்கம் செந்தில்நகா் 200 அடி சாலையில் தனது மோட்டாா் சைக்கிளில் செவ்வாய்க்கிழமை சென்றுக் கொண்டிருந்தாா்.அப்போது பின்னால் வந்த ஒரு மினி லாரி, அவரது மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்தக் காயமடைந்த சிந்தாமணி சம்பவ இடத்திலேயே இறந்தாா்.இதில் சிந்தாமணியின் மோட்டாா் சைக்கிள் மற்றொரு மோட்டாா் சைக்கிளை இடித்ததில், அதில் சென்ற கொளத்தூா் செல்லியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மோகன் (42), பின் இருக்கையில் அமா்ந்து வந்த அவரது மனைவி ஷகிலா (36) ஆகியோா் காயமடைந்தனா். உடனடியாக இருவரும், அந்தப் பகுதியில்.உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.இது குறித்து அண்ணாநகா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com