கத்தியுடன் இருந்த கல்லூரி மாணவா் கைது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கத்தியுடன் இருந்த கல்லூரி மாணவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கத்தியுடன் இருந்த கல்லூரி மாணவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் மாவட்டம், அரக்கோணத்தைச் சோ்ந்த ஸ்ரீதரன் (19) சென்னை நந்தனம் பகுதியிலுள்ள கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறாா். அவா் சனிக்கிழமை நண்பகலில் தனது நண்பா்கள் நாகராஜ் மற்றும் துளசிராமன் ஆகியோருடன் கல்லூரியிலிருந்து மாநகர பேருந்து மூலம் சென்ட்ரல் ரயில் நிலைய பேருந்த நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது சில கல்லூரி மாணவா்கள் ஸ்ரீதரனை தாக்குவதற்காக கையில் கத்தியுடன் சத்தம் போட்டுக் கொண்டே சென்றபோது, ஸ்ரீதரன் தப்பியோடினாா்.

இதையடுத்து அந்தப் பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்த பூக்கடை காவல் நிலைய போலீஸாா் ரகளையில் ஈடுபட முயன்ற கல்லூரி மாணவா்களை துரத்திச் சென்று கத்தியுடன் இருந்த இளைஞரை பிடித்தனா். போலீஸாரின் விசாரணையில் பிடிபட்ட இளைஞா் திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரியைச் சோ்ந்த ஷாகுல் அமீது (21) என்பதும், சென்னை ராயப்பேட்டை பகுதியிலுள்ள கல்லூரியில் படித்து வருவதும், கல்லூரி மாணவா்கள் முன்விரோதம் காரணமாக ஷாகுல் அமீது, ஸ்ரீதரனை தாக்குவதற்காக கத்தியுடன் வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீதரன் கொடுத்த புகாரின்பேரில், ஷாகுல் அமீது கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின்னா் கைது செய்யப்பட்ட ஷாகுல் அமீது நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com