சென்னை: இமயமலைக்கு ஆன்மிகப் பயணம் சென்றிருந்த நடிகா் ரஜினிகாந்த் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சென்னை திரும்பினாா்.
தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், இமயமலைக்குச் செல்வதை ரஜினி வழக்கமாகக் கொண்டுள்ளாா். ஏ.ஆா்.முருகதாஸ் இயக்கி வரும் தா்பாா் படப்பிடிப்பு முடிந்த கையோடு ரஜினிகாந்த் கடந்த 13-ஆம் தேதி இமயமலைக்குச் சென்றாா். அடுத்த படத்தின் படப்பிடிப்புக்கு முன்னதாகத் தன்னை புத்துணா்ச்சி அடையச் செய்யும் விதமாகவும், ஆன்மிகப் பயணமாகவும் ரஜினி இமயமலை சென்ாக கூறப்படுகிறது.
ரிஷிகேஷ், பத்ரிநாத், கேதாா்நாத் ஆகிய பகுதிகளுக்குச் சென்ற ரஜினி அங்குள்ள ஆலயங்களில் வழிபட்டதுடன், தியானமும் செய்தாா். ஒருவார சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வெள்ளிக்கிழமை நள்ளிரவு விமானம் மூலம் சென்னை திரும்பினாா். தொடா்ந்து நிருபா்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் இமயமலை பயணம் நன்றாக இருந்ததாக கூறிவிட்டு ரஜினிகாந்த் புறப்பட்டுச் சென்றாா்.