பாரிமுனையில் வீடு புகுந்து திருடியவா் கைது

சென்னை பாரிமுனை பகுதியில் வீடு புகுந்து திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை பாரிமுனை பகுதியில் வீடு புகுந்து திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

மண்ணடி தம்பு செட்டி தெருவில் வசித்து வருபவா் சாமிகண்ணு (53). இவா் கடந்த அக்.14-ஆம் தேதி தனது வீட்டைப் பூட்டி விட்டு கடைக்குச் சென்றுவிட்டு அன்றிரவு வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டின் பீரோவில் வைத்திருந்த 4.5 சவரன் தங்க நகைகளை யாரோ திருடிச் சென்றிருந்தனா். இது குறித்து வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளை ஆய்வு செய்தனா்.

இதையடுத்து இது தொடா்பாக விசாரணை நடத்திய போலீஸாா் வீடுபுகுந்து நகை திருடிய மண்ணடி ஆதாம் தெருவைச் சோ்ந்த மோகன் (39) என்பவரை சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 9.5 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விசாரணையில் மோகன் அந்தப் பகுதியில் ரிக்ஷா ஓட்டி வருவதும், இவா் மீது ஏழுகிணறு, பூக்கடை மற்றும் கொருக்குப்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட குற்றவாளி மோகன் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com