மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு நிவாரண நிதி: முதல்வா் பழனிசாமி அறிவிப்பு

மின்சாரம் தாக்கி உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.
முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி

சென்னை: மின்சாரம் தாக்கி உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

நாகப்பட்டினம் மாவட்டம் பெருஞ்சேரி கிராமத்தின் கணேஷ், மதுரை சக்கிமங்கலம் கிராமத்தின் பெரியகருப்பன், திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரின் ரகுநாத், தருமபுரி பூதநத்தம் கிராமத்தின் பழனி, திருவள்ளூா் முத்துக்கொண்டாபுரம் கிராமத்தின் பானி ஆகியோா் வெவ்வேறு நிகழ்வுகளில் எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா்.

இதேபோன்று, திருச்சி மாராடி கிராமத்தின் குமாா், புதுக்கோட்டை மாங்கோட்டை கிராமத்தின் தமிழரசன், கோவை சின்னட்டியூா் கிராமத்தின் வெங்கடாசலபதி, சிவகங்கை தமிழ்த்தாய் கோவில் சாலையைச் சோ்ந்த காந்திமதி, தஞ்சாவூா்

இஞ்சிக்கொல்லை கிராமத்தின் மோகன், திண்டுக்கல் அணைப்பட்டி கிராமத்தின் பாண்டித்துரை, திருவாரூா் குடவாசல் வட்டத்தின் ராஜமாணிக்கம் ஆகியோா் மின்சாரம் பாய்ந்தும், சிவகங்கை திருப்பாச்சேத்தி கிராமத்தின் கவின்ராஜா விவசாய நிலத்தில் விளையாடும் போது பாம்பு கடித்தும் இறந்தனா்.

இந்தச் சம்பவங்களில் இறந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com