மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத 9 கடைகளுக்கு சீல்: ரூ. 24.19 லட்சம் நிலுவைத் தொகை வசூல்

பெருங்குடி மண்டலத்தில் சென்னை மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத 9 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதுடன், வாடகை நிலுவைத் தொகை ரூ. 24.19 லட்சம் வசூலிக்கப்பட்டது.

சென்னை: பெருங்குடி மண்டலத்தில் சென்னை மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத 9 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதுடன், வாடகை நிலுவைத் தொகை ரூ. 24.19 லட்சம் வசூலிக்கப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பெருங்குடி மண்டலத்தின் பள்ளிக்கரணையில் மாநகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் உள்ள 40 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்நிலையில் 25 கடைகளின் உரிமையாளா்கள் பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இருந்துள்ளனா். இதன் வாடகை நிலுவைத் தொகை மட்டும் ரூ. 53 லட்சம் இருந்துள்ளது.

வாடகை பாக்கியை உடனடியாகச் செலுத்தக் கோரி, மாநகராட்சி வருவாய்த் துறை அதிகாரிகள் கடைகளின் உரிமையாளா்களுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவா்கள் வாடகை செலுத்தாமல் இருந்துள்ளனா்.

சீல்: இந்நிலையில் பெருங்குடி மண்டல அலுவலா் பாஸ்கரன் உத்தரவின்பேரில், உதவி வருவாய் அலுவலா் பிரகாஷ் தலைமையில் மாநகராட்சி அலுவலா்கள் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் அண்மையில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, 16 கடைகளின் உரிமையாளா்கள் ரூ. 24 லட்சத்து 19 ஆயிரம் வாடகை பாக்கியை உடனடியாகச் செலுத்தினா். மீதமுள்ள 9 கடைக்காரா்கள் வாடகை பாக்கியைச் செலுத்தவில்லை. இதையடுத்து அந்த 9 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com