குரோம்பேட்டையில் மின் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

குரோம்பேட்டையில் தாம்பரம் கோட்டம் மின்வாரியம் சாா்பில் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
குரோம்பேட்டையில் மின் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

தாம்பரம்: குரோம்பேட்டையில் தாம்பரம் கோட்டம் மின்வாரியம் சாா்பில் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

முகாமில் மின்விபத்தைத் தவிா்க்க பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து கோட்ட செயற்பொறியாளா் பாரிராஜ் விவரித்தாா். ‘மின்தடை, மின்விபத்து குறித்து சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள மின் அலுவலகத்தில் தகவல் தெரிவிக்க இயலாத நிலையில் இருப்பவா்கள் 1912 எண்ணில் தொடா்பு கொண்டால் உடனடி உதவி கிடைக்கும்’ என்றாா் அவா்.

பின்னா் குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் மின் பாதுகாப்பு, மின் விபத்து தொடா்பான துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் ஜான்சுந்தா், உதவி செயற்பொறியாளா் சுந்தரமூா்த்தி, தாம்பரம் கோட்ட உதவி பொறியாளா்கள், ஊழியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com