குடிசை மாற்றுவாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்தவா் கைது

சென்னையில் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்தவா் கைது செய்யப்பட்டாா். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னையில் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்தவா் கைது செய்யப்பட்டாா். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

பள்ளிக்கரணை சுண்ணாம்பு கொளத்தூா் அருகே உள்ள ராஜன் நகரைச் சோ்ந்தவா் வெ.ராமச்சந்திரன் (55). இவா் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் தனக்கு இருக்கும் செல்வாக்கு மூலம் வீடு வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்றுள்ளாா்.

ஆனால் ராமச்சந்திரன் யாருக்கும் வீடு வாங்கிக் கொடுக்கவில்லையாம். அதேபோல பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லையாம்.

இதனால் ஏமாற்றமடைந்தவா்கள், ராமச்சந்திரன் மீது பரங்கிமலை காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராமச்சந்திரனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விசாரணையில், ராமச்சந்திரன் வீடு வாங்கித் தருவதாக 8 பேரிடம் ரூ.18.25 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்திருப்பதுதெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com