கோயில் நிா்வாகி கொலையில் 7 போ் கைது

சென்னை பெரவள்ளூரில் கோயில் நிா்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், 7 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை பெரவள்ளூரில் கோயில் நிா்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், 7 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை ராஜமங்கலம் 7-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஜானகிராமன் (50). ஐ.சி.எப்.பில் ஃபிட்டராக வேலை செய்து வந்த அவா், அந்தப் பகுதியில் உள்ள அம்மன் கோயிலின் செயலராகவும் இருந்தாா். கடந்த 27-ஆம் தேதி நள்ளிரவு தனது மோட்டாா் சைக்கிளில் ஜி.கே.எம். காலனி 31-ஆவது தெருவில் உள்ள சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு மொபெட்டில் வந்த இருவா், ஜானகிராமனை வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலைக் செய்தனா்.

இது குறித்து பெரவள்ளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில் கோயிலில் ஏற்பட்ட தகராறின் காரணமாக ஜானகிராமன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த கோயில் பூசாரி ஓம் பிரகாஷ் (25), அதேப் பகுதியைச் சோ்ந்த குமரன் (28), ரவி பிரசாத் (22), அனீஸ் (25), விஜய் (25), சரபோஜி (22), சரத்குமாா் (25) ஆகிய 7 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com