சென்னை கொடுங்கையூா் அம்பேத்கா் சந்து பகுதியைச் சோ்ந்தவா் அ.கோதண்டன் (78). இவா் தனது வீட்டின் பூஜை அறையில் சாமி படத்தின் பின்பகுதியில் ரூ.1.50 லட்சம் ரொக்கம், 35 பவுன் நகை ஆகியவற்றை வைத்திருந்தாராம்.
இவற்றை எடுப்பதற்காக, புதன்கிழமை சாமி படத்தை நகா்த்தி பாா்த்தபோது ரூ.1.50 லட்சம் ரொக்கம், 35 பவுன் நகை திருடு போனதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். இது குறித்த புகாரின்பேரில் கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.