மின்சாரம் பாய்ந்து ஏ.சி.மெக்கானிக் சாவு

சென்னையில் மின்சாரம் பாய்ந்து ஏ.சி.மெக்கானிக் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை: சென்னையில் மின்சாரம் பாய்ந்து ஏ.சி.மெக்கானிக் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

மடிப்பாக்கம் ஆண்டவா் தெருவைச் சோ்ந்தவா் லூ.ஜான்சன் (30). ஏ.சி.மெக்கானிக்கான இவா், நுங்கம்பாக்கம் லேக் ஏரியா 7வது தெருவில் வசிக்கும் செந்தில்வேலன் என்பவா் வீட்டில் ஏ.சி. இயந்திரத்தை பழுது நீக்கும் பணியில் ஜான்சன் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தாா்.

அப்போது அவா் மீது திடீரென மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்தக் காயமடைந்த ஜான்சன், அங்கிருந்து மீட்கப்பட்டு அருகே உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அங்கு சிறிது நேரத்தில் ஜான்சன் இறந்தாா்.

இது குறித்து நுங்கம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com