தண்ணீர் லாரி கவிழ்ந்து பள்ளி மாணவர் பலி

மணலியில் தண்ணீர் லாரி கவிழ்ந்து பள்ளி மாணவர் வியாழக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.


மணலியில் தண்ணீர் லாரி கவிழ்ந்து பள்ளி மாணவர் வியாழக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.
மணலி பெரியார் நகரைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் ராஜ்குமார்,  கூலி தொழிலாளி. இவரது மனைவி ரேவதி. இவர்களது மகன் ஷ்யாம் (14) வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். மணலியிலிருந்து பெரியார் நகருக்கு பேருந்து வசதி இல்லாததால் சுமார் இரண்டு கி.மீ. தூரம் நடந்தே சென்றுவர வேண்டிய நிலை உள்ளது.  
இந்நிலையில் வியாழக்கிழமை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றுவிட்டு  வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது தண்ணீர் லாரி ஒன்று வரவே அதனை கைகாட்டி லாரியில் ஏறியுள்ளார். சிறிது தூரம் சென்ற தண்ணீர் லாரி எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிட திருப்பியபோது பள்ளத்தில் கவிழந்தது.  அதில் ஷ்யாம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி டிரைவர் குபேந்திரன் காயங்களுடன் உயிர்தப்பினார். மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com