இந்தியன் வங்கியால் கையகப்படுத்தப்பட்ட வீடு, மனைகளின் கண்காட்சி, சனி (செப்.14) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (செப்.15), தியாகராய நகரில் உள்ள ஸ்ரீ விஜயா மஹாலில் நடைபெறுகிறது.
இதில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கோவை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கும்பகோணம், புதுச்சேரி, திருப்பதி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் கையகப்படுத்தப்பட்ட வீடுகள், வணிக வளாகங்கள், வர்த்தக மனைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன.
இவை அனைத்தும் தகுந்த ஆவணங்களுடன் சட்டவிதிகளுக்குட்பட்டு கையகப்படுத்தப்பட்டவை. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு பிடித்த நிலங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த சொத்து வகைகளை வாங்க விரும்புவோருக்கு கடன் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் அரிய வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.