வீடு இடிந்து விழுந்து பெண் பலி

சென்னை, மண்ணடியில் வீடு இடிந்து விழுந்து பெண் இறந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


சென்னை, மண்ணடியில் வீடு இடிந்து விழுந்து பெண் இறந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில்  மண்ணடி, அய்யப்ப செட்டித் தெருவில்  நவாஸ்கான் என்பவர் வீட்டில் மழையின் காரணமாக ஒரு பக்கவாட்டு சுவரும், மேற்கூரையும் வியாழக்கிழமை அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளிடையே சிக்கிய நவாஸ்கானின் மனைவி ஜெரீனா (50)  உயிரிழந்தார். எஸ்பிளனேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com