தண்டவாள பராமரிப்புப் பணி: நாளை ரயில் சேவையில் மாற்றம்

சென்னை எழும்பூர்-விழுப்புரம் பிரிவில், காட்டாங்குளத்தூர்-சிங்கபெருமாள்கோவில் இடையே தண்டவாள பராமரிப்புப் பணி நடக்கவுள்ளதால், திங்கள்கிழமை(செப்.30) ரயில் சேவையில் மாற்றம்

சென்னை எழும்பூர்-விழுப்புரம் பிரிவில், காட்டாங்குளத்தூர்-சிங்கபெருமாள்கோவில் இடையே தண்டவாள பராமரிப்புப் பணி நடக்கவுள்ளதால், திங்கள்கிழமை(செப்.30) ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

செப்.30-ஆம் தேதி மாற்றம் செய்யப்படும் ரயில்கள்:  சென்னை கடற்கரை-அரக்கோணத்துக்கு செப்டம்பர் 30-ஆம் தேதி காலை 9.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் கூடுவாஞ்சேரி-அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு காலை 9.32, 10.56 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன. 

சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு காலை 10.08, முற்பகல் 11.48 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.  செங்கல்பட்டு -சென்னை கடற்கரைக்கு காலை 10.55, நண்பகல் 12.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன. செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு முற்பகல் 11.30, மதியம் 1 ஆகிய நேரங்களில்  இயக்கப்படும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு-கூடுவாஞ்சேரி இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன. 

சிறப்பு ரயில்கள்: பயணிகள் வசதிக்காக செப்டம்பர் 30-ஆம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. சென்னை கடற்கரை-அரக்கோணத்துக்கு செப்டம்பர் 30-ஆம்தேதி  நண்பகல் 12.45 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் 
இயக்கப்படவுள்ளது. இதுதவிர, சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு செப்டம்பர் 30-ஆம் தேதி மதியம் 1 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com