பெருநகர சென்னை மாநகராட்சியின் முதல் அரையாண்டுக்கான தொழில் வரியை திங்கள்கிழமைக்குள் (செப். 30) செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்தி:
சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மத்திய, மாநில, பிற அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தொழில் புரிவோர், வணிகர்கள் ஆகியோரிடமிருந்து ஆறு மாதத்துக்கு ஒருமுறை தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. 2019-2020 நிதி ஆண்டுக்கான முதலாம் அரையாண்டு தொழில்வரியை திங்கள்கிழமைக்குள் (செப். 30) செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் அபராதம் மற்றும் வட்டித் தொகை கணக்கீடு செய்து வசூலிக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.