ரயிலில் அடிபட்டு இருவர் பலி

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் ரயில் மோதி இளைஞர் ஒருவர் தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். விசாரணையில் அவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் உசிலம்பட்டி சாலை பகுதியைச் சேர்ந்த திருப்பதி (40)


சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் ரயில் மோதி இளைஞர் ஒருவர் தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். விசாரணையில் அவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் உசிலம்பட்டி சாலை பகுதியைச் சேர்ந்த திருப்பதி (40) என்பது தெரியவந்தது. இவர் கோடம்பாக்கம் அருகே விடுதியில் தங்கியிருந்து, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும், நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் வெள்ளிக்கிழமை காலை தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, மின்சார ரயில் மோதி உயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதேபோன்று, 40 வயது மதிக்கத்தக்க ஆணும் எழும்பூர் ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை இரவு தண்டவாளத்தை கடந்த போது, ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com