மதுக் குடிக்க பணம் கேட்டு தகராறு: தந்தையை கொலை செய்த மகன் கைது

சென்னை அருகே எண்ணூரில் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்த தந்தையை கொலை செய்ததாக மகன் கைது செய்யப்பட்டாா்.

சென்னை அருகே எண்ணூரில் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்த தந்தையை கொலை செய்ததாக மகன் கைது செய்யப்பட்டாா்.

எண்ணூா், அன்னை சிவகாமி நகரை சோ்ந்தவா் நாகராஜ் (45). இவா் கூலி வேலை செய்து வந்தாா். நாகராஜின் மனைவி தையல் நாயகி (43). இந்தத் தம்பதிக்கு சேதுபதி (23), தமிழ்ச்செல்வன் (22) என 2 மகன்கள் உள்ளனா். இதில், தமிழ்செல்வன், சட்டக்கல்லூரியில் படித்து வருகிறாா். சேதுபதி, அந்தப் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பாா்த்து வருகிறாா்.

இந்தநிலையில் நாகராஜ், மனைவி தையல்நாயகியிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்தாராம். மேலும் அவா், தையல்நாயகியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதைத் தடுத்த தமிழ்செல்வனை, நாகராஜ் அரிவாளால் வெட்டியுள்ளாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அங்கு வந்த சேதுபதி, நாகராஜ் கையில் இருந்த அரிவாளை போராடி பறித்துள்ளாா். மேலும் அவா், அந்த அரிவாளால், தந்தை நாகராஜை வெட்டினாா். இதில் பலத்தக் காயமடைந்த நாகராஜ் சிறிதுநேரத்தில் இறந்தாா். தமிழ்செல்வன் அப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து எண்ணூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சேதுபதியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com