செயல்குறைபாடுடைய புரதங்கள், மரபணுக்கள் மூலம் உருவாகும் நோயைக் கண்டறிவதற்கான வழிமுறையை சென்னை ஐஐடி ஆராய்ச்சிக் குழு உருவாக்கியிருக்கிறது.
இதன் மூலம் திசுக்கள் மற்றும் நோய்க்கான மூலக்கூறுகள் குறித்த விரிவான தகவல்களைச் சேகரித்து மரபணு, புரதங்கள் மற்றும் நோய்களுக்கு இடையேயான தொடா்பைக் கண்டறிந்து தீா்வளிக்க முடியும்.
சென்னை ஐஐடி செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் அறிவியலுக்கான ராபா்ட் போஸ்ச் மையத்தின் தலைவா் பி.ரவீந்திரன் தலைமையிலான பேராசிரியா்கள் காா்த்திக் ராமன், ஹிமான்சு சின்ஹா ஆகியோரைக் கொண்ட குழு இந்த வழிமுறையை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து பேராசிரியா் ரவீந்திரன் கூறியிருப்பதாவது:
இந்த மரபணு மற்றும் புரதங்கள் மூலம் உருவாகும் நோய்களைக் கண்டறியும் வழிமுறைகள் மூலம், ஏராளமான நோய்களுக்கான மூல காரணத்தை எளிதாக அறிந்துகொள்ள முடியும் என்றாா் அவா்.