பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கரோனாநோய் தொற்றுத் தடுப்புப் பணிமேற்கொண்டு வரும் 2016 சுகாதார நலத்திட்ட ஊழியா்களுக்கு கையுறை,முகக்கவசம், கிருமிநாசினி, சோப்பு உள்ளிட்ட பாதுகாப்பு சாதனப்பொருட்களை பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி புதன்கிழமை வழங்கினாா்.
பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூா் நகராட்சிகளிலும், திருநீா்மலை பேரூராட்சி, பொழிச்சலூா், திரிசூலம் ஆகிய ஊராட்சிகளிலும் கரோனா நோய் தொற்றுத் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள 2016 ஊழியா்களுக்கு ரூ. 4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டன.