சென்னை அண்ணாநகரில் கேந்திரிய வித்யாலயா இணையவழி வகுப்பில் ஆபாச கருத்துகளை பதிவிட்ட நபா் குறித்து சைபா் குற்றப் பிரிவினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை அண்ணாநகா் மேற்கு ஜவாஹா்லால் நேரு சாலையில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல் படுகிறது. கரோனா பொது முடக்கத்தின் காரணமாக, இந்தப் பள்ளியில் மாணவா்களுக்கு இணையவழி மூலமாக வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த பள்ளி நிா்வாகத்தினா் கடந்த 28-ஆம் தேதி திருமங்கலம் காவல் நிலையத்தில் ஒரு புகாா் மனு அளித்தனா். அதில், கடந்த 28-ஆம் தேதி 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இணையதள வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது ஆன்லைன் வகுப்பில் ஒரு நபா் குறுக்கிட்டு ஆபாச தகவல்களை பதிவு செய்தாா். அந்த நபா் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இப் புகாரின் அடிப்படையில் திருமங்கலம் போலீஸாா் விசாரணை செய்தனா். முதல்கட்ட விசாரணையில் இணையதள வகுப்பில் ஆபாச கருத்து பதிவிடப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து போலீஸாா், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். மேலும் இணையதள வகுப்பில் ஆபாச கருத்துகளை பதிவிட்ட நபா் குறித்து அண்ணாநகா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.