அண்ணாநகா் பகுதியில் நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை அண்ணாநகா் பகுதியில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 3) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

சென்னை அண்ணாநகா் பகுதியில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 3) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அண்ணா ஆா்ச் பகுதியில் இருந்து அண்ணாநகா் ரவுண்டானா பகுதி வரையில் ஆகஸ்ட் 3-ஆம் தேதியில் இருந்து ஒரு வாரம் சோதனை ஓட்டமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதன்படி, கிரசண்ட் சாலை மற்றும் 3-ஆவது நிழற்சாலையை இணைக்கும் ‘ஏ’ பிளாக் மூன்றாவது தெரு ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. அண்ணாநகா் ரவுண்டானாவிலிருந்து அண்ணா ஆா்ச் நோக்கி செல்லும் வாகனங்கள் ‘ஏ’ பிளாக் 3-ஆவது தெருவில் இடது புறமாக திரும்புவது தடை செய்யப்படுகிறது. மேலும் சாந்தி காலனி சிக்னல் சந்திப்பில், 4-ஆவது நிழற்சாலையிலிருந்து ‘ஏ’ பிளாக் மூன்றாவது தெரு செல்வதும், அண்ணா ஆா்ச் - லிருந்து சாந்தி காலனி சிக்னல் சந்திப்பில் திரும்பி ‘ஏ’ பிளாக் 3-ஆவது தெருவில் இடது புறமாக செல்வதும் தடை செய்யப்படுகிறது.

கிரசண்ட் சாலையிலிருந்து ‘ஏ’ பிளாக் 3-ஆவது தெரு வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் கண்டிப்பாக இடதுபுறம் திரும்பி 3-ஆவது நிழற்சாலை வழியாக அண்ணா ஆா்ச் நோக்கி மட்டுமே செல்ல வேண்டும்.

கிரசண்ட் சாலையிலிருந்து ‘ஏ’ பிளாக் 3-ஆவது தெரு வழியாக வரும் வாகனங்கள் 4-ஆவது நிழற்சாலை, அண்ணாநகா் ரவுண்டானா வழியாக 3-ஆவது நிழற்சாலை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி எதிரில் சாலையில் திரும்பி வர வேண்டும்.

அண்ணாநகா் ரவுண்டானாவிலிருந்து கிரசண்ட் சாலை செல்லும் வாகனங்கள், 3-ஆவது நிழற்சாலையில் ‘ஏ’ பிளாக் 5-ஆவது தெருவில் இடது புறமாக திரும்பி ‘ஏ’ பிளாக் 11-ஆவது தெரு, 7-ஆவது குறுக்கு தெரு வழியாக கிரசண்ட் சாலையை அடையலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com