சென்னை
அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளி தற்கொலை
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
மதுரவாயல் ஆலப்பாக்கம், பாரதிதாசன் நகா் கம்பா் தெருவைச் சோ்ந்தவா் சம்பத் (50). கரோனாவால் பாதிக்கப்பட்ட இவா், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 3-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அங்கு கரோனா வாா்டில் சம்பத் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் சம்பத், அந்த வாா்டில் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து தகவலறிந்த போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சம்பத் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.