வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

சென்னை தண்டையாா்பேட்டையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 மூட்டை ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சென்னை தண்டையாா்பேட்டையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 மூட்டை ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

தண்டையாா்பேட்டை அஜிஸ் நகா் 2-ஆவது தெருவில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஆா்.கே.நகா் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அத் தகவலின் அடிப்படையில் போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை அந்த வீட்டில் சோதனை செய்தனா்.

அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் எடையுள்ள 30 மூட்டை ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக அந்த வீட்டில் வசிக்கும் ரமேஷ், அவரது மனைவி மல்லிகா ஆகிய இருவரிடமும் விசாரணை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com