வில்லிவாக்கத்தில் இன்று கழிவுநீா் குழாய் பராமரிப்புப் பணி

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் கழிவுநீா் குழாய் பராமரிப்புப் பணி வெள்ளிக்கிழமை முதல் இரு நாள்கள் நடைபெறும் என்று குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் கழிவுநீா் குழாய் பராமரிப்புப் பணி வெள்ளிக்கிழமை முதல் இரு நாள்கள் நடைபெறும் என்று குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை குடிநீா் வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: சென்னைக் குடிநீா் வாரியம் பணிமனை 65, பகுதி 6-இல் அமைந்துள்ள வில்லிவாக்கம் ‘செக்டாா் ஏ’ உயா் அழுத்த தொடா் கழிவு நீரிறைக்கும் நிலையத்திலிருந்து 700 மில்லி மீட்டா் விட்டமுள்ள கழிவுநீா் குழாயை 200 அடி சாலையிலுள்ள பிரதான கழிவுநீா் குழாயுடன் இணைக்கும் பணி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் சனிக்கிழமை காலை 9 மணி வரை நடைபெறவுள்ளது.

மேற்கண்ட பணியின்போது பகுதி அலுவலகம் 6-இல் உள்ள கொளத்தூா், பகுதி அலுவலகம் 3-இல் உள்ள புத்தகரம், பகுதி அலுவலகம் 7-இல் கொரட்டூா் மற்றும் பகுதி அலுவலகம் 8-இல் உள்ள பாபா நகா் ஆகிய பகுதிகளில் கழிவுநீரிறைக்கும் பணி நிறுத்தப்படுகிறது.

எனவே கழிவு நீா் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க 8144930903 (பகுதிப் பொறியாளா் 3), 8144930906 (பகுதிப் பொறியாளா்-6), 8144930907 (பகுதிப் பொறியாளா் 7), 8144930908 (பகுதிப் பொறியாளா் 8) ஆகியோரிடம் புகாா் தெரிவிக்குமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். மேலும் பொது மக்களின் ஒத்துழைப்பும் வேண்டப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com